'எதுவும் நிரந்தரம் இல்லை
என்றார் ' ,ஒருவர்
'நிரந்தரம் என்பதும்
நிரந்தரம் இல்லை'
என்றேன்,
நான்
கடு கடு முகம்
கனி வுடன் முரண்
சிடு சிடு முகம்
சினத்துடன் அரண்
வெடு வெ டு பேச்சு
வெல வெலப்பு மூச்சு
வேண்டியது போச்சு
சகிப்பு த் தன்மை அறிந்த நாம், அதன் வழி செல்வதில் தடுமாற்றங்கள் பல. எளிதில் விலகுவது, நியாயம் கற்பிப்பது அதிகம். சற்று நிதானித்து நின்று யோ சித்தால் அதன் அர்த்தம், மதிப்பு விளங்கிடும்..
குடும்பம் தொடங்கி, சமூக வாழ்க்கை வரை ஒரு நெடிய போராட்டம் ஊடே நகர வேண்டிய அவசியம் இந்த உணர்வு மனிதர்களிடையே நிலைப்பதற்கு, அதன் படி அவர்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு அத்தியாவசியம்.சமூக நல்லிணக்கத்தை சாதிக்கும் அருங் கருவி சகிப்புத் தன்மை ஆகும்.
பொறை யுடமை குறித்து வள்ளுவம் பகர்வதும் இது குறித்து தான்.மனப்பாடம் அளவில் தேர்வோடு நின்று போன விழுமியங்களில் இதுவும் ஒன்றாகும்.
உலக அரசியல் களத்தில் கூட இது, அருகி வரும் பண்பாக நிலவுகிறது. கள முனைகள் அரங்கேறி, வளங்களை அழித்து ,உயிர்களை இலட்சக்கணக்கில் கொள்ளை கொள்ளும் அளவிற்கு கடுமையான போக்கிற்கு விரைவாக செல்கிறது.
நியாயம் கற்பிக்கும் பாடங்கள் பல சாதி, சமய, மத, பொருளியல் கோணங்களில், பல உலக மன்றங்களில் வைக்கப்படுகின்றன.
எட்டி இருந்தேன்
எட்டி இல்லை
சுட்டி இருந்தேன்
சூ து இல்லை
கட்டி இருந்தேன்
கவடு இல்லை
முட்டி இருந்தேன்
மூ டம் இல்லை
வெட்டி இருந்தேன்
வெறுப்பு இல்லை
ஒத்துப்போவது
உணர்வு செத்துப் போவது
கற்றது போதாது
கல்லாதது ஏறாது
உற்றுப் போவது
அற்றுப் போவது
அருகில்
விட்டுப் போவது
வேலை வாங்குவார்
வேண்டிய போது
கெடு விதிப்பார்
தொடு திரை கணினியாய்
தொழில் சேர்ப்பார்
கலை இலக்கிய உலாவில்
அணி சேர்வார்
தனிப் பெருமை
நாட்ட
தாளம் போடுவார்
பிறர் உழைப்பும்
உரிமம் சேர்த்து
ஊடக பெருமை
வே ட்டகம் தோ ற்கும்
பூட்ட க மனிதர்
குளிர் கால குளுமை
சுழியம் செல்ல
கும்மிருட்டு
விசும்பின்
விக்கல்
குடை விரிக்கும் முன்
தாகத்தில் தாளம் போட
போர்த்திய ஆடை
நேர்த்தி போ தாயாம்
பனித் துளிகள்
வாழ்த்தில்
'பாலி கிளினிக் '
படியில்
"மைலா" வரவை
தரிசிக்க
"புளுவா "மாலை
வெறுப்பே ற்க
விரையும் மனம்
பொறு ப் பே ற்க
கரையும்
உரைப்பது ஒன்று
நடப்பது ஒன்று
உரைக்கும் விதமா !
நடக்கும் விதம் ?
முதுமை வரமா? சாபமா?
குடும்ப அமைப்பில்
இது வழக்கமாக எழும் கேள்வி. உருவாக்கிய, உதவிய தாயும், தந்தையும் தம் கடமை முடித்து அகவை கூடும் காலம் ,துணையாக நிற்கும் வாரிசுகள் மெல்ல, மெல்ல விலகிப் போக , தனி மரமமாய் தள்ளாடும் கோலம். தாங்க முடியாத துயரம்!
தனிக் குடும்ப ஏ ற்பாட்டில், தன் கடமை நிலை மறந்து ,தடுமாறும் உறவு. கடந்த காலத்தை எளிதில் புறந்தள்ளி, விட்டு விலகி, விக்கி, நிற்கும் !
பொருளாதார தற் சார்பு முதுமையில் பேருதவி என்றாலும், தள்ளாத நிலையில் உணவு சமைப்பது, வீட்டு பராமரிப்பு,ஓய்வாக வெளியே காலாற செல்வது போன்ற, தங்கள் அவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்திட , ஓடி, ஆடி பணி மேற்கொள்ள, உணர்வு பூர்வமான ,உதவிக் கரங்கள் அவசியம்.
தமிழ்ச் சமூக த்தில் கூட்டுக் குடும்பம் உடைந்து, தனிக் குடும்பம் தழைத்த விளங்கும் இன்றைய நிலையில் இப் பிரச்சினை கூடுதல் அக்கறை மற்றும்
கவனம் பெறுகிறது.
ஓடிக் கொண்டே இரு
ஓட்டிக் கொண்டே இரு
உருண்டு கொண்டே இரு
உருட்டிக் கொண்டே இரு
இருத்தல் தேவையில்
இருள் என்ன ?
பகல் என்ன ?
முதல் என்ன ?
முடிவு என்ன ?
அடை மழை ஐப்பசி
கழிந்தது
கார் கால கார்த்திகை
புலர்ந்தது
உறவு அழைக்க
வானூர்தி பயணம்
இலையுதிர் காலம்
வரவேற்பில்
இனிமை சேர்ந்த்திட்
குளுமை கூடிட
சிந்தும் குருதி-
சிவப்புதான்
எவருக்கும் !
குழந்தைகளை கொல்வது
உயிர்த்திடும் குழவிகளை
மருத்துவ
மனைகளில்
சிதைப்பது
காக்கும் மருத்துவன் -
பொதுவானவன்
புரிபவனுக்கும்
படுபவனுக்கும்
அவனையும்
ஒழிப்பது சரியா ?
நெறியா?
அறம் -
மனிதத்தின் அடிப்படை ப்
பண்பு
மார்க்கத்திற்கு மார்க்கம்
மாறும் விழுமியமன்று !
" மற த்திற்கும்
அன்பே துணை"
கொல்லும் சினம்
கொள்கையாக
கோலோச் சும்
அதிகாரம் !
சகிப்பின்மை சக்கரத்தில்
திசை திருப்பும்
ஆயுத பலத்தில்
நியாயம் பேசும்
உலகம்
பேச்சளவில்
உதட்டளவில்
உண்மை தடுமாறும்
மன்றங்களில்
மல்லாடும்
அடுக்கடுக்காய்
உயிர்கள்
பலியாகும்
வறண்ட தேசம்
நிறம் மாறும்
செம்புலம் சேர்க்கும்
நொடி தோறும்
வெறி
வெடியில்
நெறி பிறழும்.........
நியதி, நீதி
எ வருக்கு ?
அடிப்பவனுக்கு
இல்லை
பட்டவனுக்கே
சொந்தம்
வலியும், கிலியும்
துன்பமும், துயரமும்
இருந்த இடம் இழந்த போதும்
இருக்கும் இடம் போதும் போதும்
மறைந்த இடம் மறந்த போதும்
மக்கள் வாழ்வில் இருந்தால் போதும்
காலியான வாழ்க்கையில் கூலியாக
குண் டி நனைந்தால் போதும் போதும்
துரத்தும் துயரம் நூறாண்டு சந்ததிகள்
சகதியில் சதி வலையில் ஆதிக்க சக்திகள்
அடிமைப்படுத்தும் வாழ்க்கை எம்மிடம்
இல்லை
ஒருக்களித்தே ஒண்டி வாழும்
புலமும் புழுதியாயிற்றே!
போரின் பிடியில்
ஊரும் உறவும் சிதைந்து
இயற்கையின் இறக்கமும்
எட்டிப் போக
வன்மம் கோ லோ ச்ச
வக்கிரம் உக்கிரம் அடைய
வாய்மூடிடும் உலகம்
வாய்க்கரிசி வண்டி, வண்டியாய்
நிவாரண பதாகை ஏ ந்தி
நித்தில ஊர்வலம்
முன்னங் கால்
இரண்டு தூக்கி
கங்காரு போல்
இரு கைகள் சேர்த்து
விழிகள்
முன் நிறுத்தி
வால் ஆட்டி,
அசைத்து
விசில் ஒலி
எழுப்பி
விசை ஒலி
மாந்தர்
சிந்திய, சிதறிய
பருக்கைகள்
சேகரித்து
உண்ணும் பிள்ளை
உன்னால் இல்லை
தொல்லை
ஒடுக்குவது , ஒழிப்பது
செல்வம் கொழிப்பது
வே லிக்குள் அடைப்பது
கூலியாக காலியாக்குவது
குடி நீர், மின்சாரம்
தன் அதிகாரத்தில்
வழியும், பாதையும்
கண்காணிப்பில்
நொடியும் துடிமத்தில்
நோஞ்சான் சமூகமாக
நுண்ணறிவு தொழில்நுட்பம்
ஓங்கியவன் ஆயுதமாய்
நியாயம் பேசுவார்
வாழ்விடத் தை விட்டு போ
நிவாரண வண்டிகள் அணி
ஆராதிக்கும் உம்மை
சவப்பெட்டி தொடக்கமாக
சன நாயக கோமான்
சமரசம் ஆயுத முனையில்
சந்ததி அழித்து
நீ சுட்டால் பாதுகாப்பு
உனக்கு விடுதலை
அவன் தடுத்தால்
தறுதலை
தீவிரவாதி
அளவுகோல் அளிப் பான்
ஆயுத முனையில்
வியாபாரி
அமைதி கெடுப்பேன்
அடுத்த வீட்டு
கொள்ளி யாய்
அடுத்து கெ டுப்பே ன்
கடனில் தருவேன்
உடன் அளிப்பேன்
உன் நிலம் எனக்கு
உன் வளம் எனக்கு
ஆயுதம் கொடுப்பேன்
அழகாய் விளக்கம்
அளிப்பேன்
பகை சேர்ப்பேன்
புகை மூட்டுவேன்
அடித்து சாக
சவப்பெட்டி தருவேன்
கடனில்
அமைதி எமக்கு
அமை தீ
உனக்கு
பஞ்சாயத்து
எம் பார்வையில்
பஞ்ச தாயத்து
உம் கழுத்தில்
'பஞ்ச தந்திர
நாயகன்'
உன்னை அடித்தால்
அவனுக்கு வலிக்கும்!
நீ அடித்தால்
பிறருக்கு
வலிக்காதா?
அடிபட்ட வன், மிதி பட்டவன்
அடிமையாய்
ஆயிரம் ஆண்டுகளாய்
நிலம் இழந்து , நீர் இழந்து
ஏதிலியாய்
உரிமை வேட்கை
உனக்கு மட்டும்
சொந்தமா?
பூர்வீக குடிகளை
கொன்று குவித்த
மென்று தின்ற
வல்லதிகாரம்
உலகைச் சுற்றி
வலம்
இரத்த வாடையில்
ஆயுதம் தரித்து
எல்லை தாண்டி
கொள்ளிவாய்
சனநாயக
' நரிதாரத்தில் '
கருடனை மிஞ்சும்
திருடன்
நீர் அணிந்தால்
என்ன?
ஊர் அலைந்தால்
என்ன?
சீர் நின்றாள் !
சரி
சீறி நின்றாள் !
வெறி
உணர்ச்சிவய ஊர்வலம்
உள்ளது காணார்
உண்மை உணரார்
உள்ளத்தில் உள்ளதை
அறியோம்
ஊரில் உள்ளதை
அறிவோம்
நேரில் பேச
நெருடும்
மறைவில் மணிக்கணக்கில்
சனநாயக பாடம்
பெற்றது நீயா?
பிறந்தது நானா?
உற்றது நீயா ?
உணர்ந்தது
நானா?
கற்றது நானா?
கற்பித்தது
நீயா?
விட்டது நீயா?
பிடித்தது
நானா?
தென்னை இருந்தது
திண்ணை இருந்தது
கிணறு இருந்தது
மழை நீர் சேர்ந்தது
மரம் இருந்தது
நிழல் சேர்ந்தது
தொட்டி கழிவறை
அடுப்பு எரிக்கும்
சாம்பலில் நிறைந்தது
பருவ முறையில்
விளை நில
எருவுக்கு சென்றது
சாலவம் தவளைகள்
இருப்பிடம் ஆனாது
கொசு என்பதே
அறியாமல்
ஈக்கள் மட்டும்
வீடுகளில், வீதிகளில்
உலா வந்தது
தெருவெங்கும்
குழந்தைகள்
விளையாட்டு
குதூகலம் சேர்த்தது
மின் வசதி ,
எங்கோ ஒன்று
புழுக்கம்
இரைச்சல்
அருகி நின்றது
சாணம் மெழுகிய
இல்லம்
சந்ததி சேர்த்தது.
யார் குற்றம்
போர் குற்றம்
ஊர் குற்றமா?
உன் குற்றமா?
அனைத்தும் செய்வாய்
அக்கிரம அரவணைப்பில்
வெல்வாய்
அன்றும் , இன்றும்
அணி சேர்ப்பாய்
உலகின் மன சாட்சி
உண்மையின் காட்சி
சப்பான், கொரியா,
வியட்நாம், ஆப்கான்
ஈராக், லிபியா,
யூகோஸ்லாவிய..........
சுத்தம் செய்வோம்
சத்தம் செய்யோ ம்
மொட் டை மாடியிலும்
காற்றோடு
பே ரிரைச் சல்
இசையாயினும்
வசையாயினும்
அளவே
நம்பிக்கை பேரில்
செவிப்பறை
கெஞ்சும்
அலப்பறை
ஆதிக்கத்தில்
மின்சார மேளம்
ஆலய மணி
ஓய்வில்
நில நடுக்கம்
குலை நடுக்கம்
உயிர் எடுக்கும்
உடமை அழிக்கும்
தகடுகள் நகர்வில்
நாடுகள் நகரும்
நகரங்கள் தகரும்
ஊர்கள் உள்வாங்கும்
உடைவுகள் அடவு காட்டும்
செப்பனிடும் பூமி
சேதம் விளைவிக்கும்
சாமி
நீர் வளம், உறிஞ்சும்
கனிம வளம் சுரண்டும்
அளவற்ற ஆசையில்
ஆளை க் கொல்லும்
போதையில்
வியாபாரத்தின் எல்லை
பூமிக்குள்ளும்
ஆழம் பார்க்கும்
அகல, நீள ம்
நோக்கும்
ஆறாவது இழந்து.
மொரோக்கோ
துயரம்
பேரழிவின்
உயரம்
ஒன்று கூடும்
இருபதும்
ஓயாமல்
முதலீடு சேர்க்கும்
ஓட்டை, உடைசல்
வணிகம் சேர்க்கும்
ஓயாமல் சிண்டு முடியும்
கருவிகள் விற்று
உயிர்கள் உருவும்
ஒழியும் மனிதம்
கொழிக்கும் செல்வம்